"தாரே ஜாமீன் பர்ரின்" கவனச் சிதறல் பையனான "இஷான்" கதாபாத்திரத்திற்குப் பின், என்னை பற்றி நானே உணரமுடிந்த கதாபாத்திரம் "
நித்யா" தான். மயிலிறகு கூர்மைகளில், மை நிரப்பி, சிலாகித்து எழுத விரும்புகின்றேன்.
"எப்பவும், எந்த நிலையிலும், பிடித்தவர்கள் தன் கூடவே இருக்க வேண்டும்"
என்ற மனநிலை, சண்டையிட்ட காலத்தை மறக்க வைக்கின்ற "அன்று பார்த்தது அந்த
பார்வை வேறடி, இந்தப் பார்வை வேறடி" ரக சின்ன சின்ன திடீர் சந்தோஷங்கள்,
"அவ அப்செட் ஆகுற மாதிரி ஏதாவது சொன்னா, சாரி கேட்டதுக்கு அப்புறம் கூட
சண்டை போடுவா" என்ற வைராக்கிய குணம், "எனக்காக சந்தோஷமா இருக்குற மாதிரி
அட்லீஸ்ட் நடிக்கலாம்ல" என்று பிடித்தவர்களின் அன்பை தன்னிலைக்கேற்ப
தேடுவது, "ஒரு பொண்ணு சிரிச்சா அதை லவ்வுன்னு நினைக்கிற பசங்கள்ல ஒருத்தனா
நீ" என்ற சமகால பளீர் சிந்தனை, "வேற ஏதும் சொல்லாத வருண், போகாதன்னு
மட்டும் சொல்லு வருண்" என வாக்குவாதத்திற்க்குள்ளும் ஒளிந்திருக்கின்ற
அன்பு, காயப்படுத்திய சுடு சொற்களுக்காக, பழகியதை யோசிக்காமல் உறவையே
தூக்கி எறிவது, "எனக்குப் பிடிச்சிருக்கு. நாம ஒண்ணா இருக்க
முடியுது.என்னைப் பொறுத்தவரைக்கும் இது குவாலிட்டி டைம். அப்புறம்
வாழ்கையில முதல் தடவை ஒரு ரெட் சிக்னல் ட்ராபிக் ஜாம்ல வெயிட் பண்ண
எனக்குப் பிடிச்சிருக்கு" என்று ரசித்து, ரசித்து நிகழ்கால வாழ்கையை
தேர்ந்தெடுத்து பயணம் செய்வதில் உள்ள ஆர்வம், "எனக்கும் ஒன்னும் ப்ராப்ளெம்
இல்லை. யார்கூட இருக்குறேங்குறது தான் எனக்கு முக்கியம்", "இங்க
உட்காரட்டும்" என்று பிடித்தவர்கள்கூட இருக்கும்போது ஏற்படும் ஓர் மன
உணர்வு, "எனக்கு என்ன பிடிக்கும்ன்னு எனக்கே தெரியலை. Actually எனக்கு
தெரியும் ஒரேயொரு விஷயம். "நீ". உன்னை பாக்கணும், உன்கூட இருக்கணும் daily.
அவ்வளவு தான் என் மனசுல எப்போதுமே. அதை விட்டா வேற எதுவுமே இல்லை.அதான்
உண்மை", "ஐ மிஸ் யு வருண், என்ன பண்ணப் போறேன்னே தெரியலை", "நீ இருப்பீல்ல.
அதனால கோச்சிங் சேர்ந்திருப்பேன்", "8 நாள் கழிச்சு மீட் பண்றோம். 1 Hour ல
நீ போயிடுவ" என பல காட்சிகளில் வருகின்ற, பழகிட்டு விடவே முடியாத மனசு,
"வருண், முன்ன மாதிரி என்கிட்டே பேசுறதே இல்லை" என ஒவ்வொரு நிமிஷங்களிலும்,
ஏதோவொரு தேடல்களில் கலங்கித் தவிப்பது, "நீ கேட் எக்ஸாம் எழுதி முடிச்சதுல
எனக்குத் தான் நிறைய சந்தோஷம். Back to normal now varun. எப்படி
இருந்தோமோ அப்படி இருக்கணும் எனக்கு" என்று பிடித்தவர்கள் நம்மை விட்டு
தூரமாக செல்லும்போது, ஏற்படும் கிறுக்குத்தன அன்பு, "என்னை விட்டுடு.ஏன்னா
என்னால அது முடியாது" என எடுக்கும் திடீர் கோப முடிவு, "ஆனா அன்னைக்கே
இமெயில் அனுப்பியிருந்தா நல்லா இருந்திருக்கும்.உன் மனசுல இருந்து வந்த
வார்த்தைகளா இருந்திருக்கும். இப்போ படிக்கும்போது நல்லா புக் படிக்கிற
மாதிரி இருந்தது" என்று ரசனையோடு நியாயம் பேசுவது, "செல்லச் சண்டை
போடுகிறாள், தள்ளி நின்று தேடுகிறாள், கண்ணை மூடி தூங்குவதைப் போல்
நடிப்பது, எந்தன் குரல் கேட்கத்தானடி" என்ற வரிகளில் காட்டும் பாவனைகள்
சொல்லும் சேதிகள் , அன்போடு திரும்ப வரும் உறவுகளை , "அந்தக் குட்டி குட்டி
பாக்ஸை டிக் பண்ணிட்டியா ? அடுத்த பாக்ஸ் நானா" என்று கேள்வி கேட்டு,
அன்பில் செய்த ஆயுதங்களால் காயப்படுத்துவது, "முடியலைல, சத்தம் போடாம,
சண்டை போடாம, பதிலுக்கு பதில் சொல்லாம இருக்க முடியலைல" என்று கோபத்தில்,
செய்வதறியாமல் தன்னிலை தடுமாறி, எந்தவொரு உறவையும் உதறிச் செல்வது,
எந்தவொரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போது, பிடித்தவர்களை நினைக்க
வைக்கும் ஏதாவதொரு தருணம், பிடித்த உறவுகளே, அந்த ரிலேஷன்ஷிப்பை
முடிவுக்கு கொண்டுவரும்போது, வெளிப்படுத்தும் அதீத அன்பின் வெளிப்பாடுகள் /
மணமேடையில் நிற்கமுடியாமல் தடுமாறுவது, சற்று முன்பு பாடலில்
பார்க்குமிடத்திலெல்லாம் கடந்துபோன பழகிய இடங்களை நினைத்துக் கொண்டிருப்பது
என்று எனக்குள் இருந்த பல கேரக்டர்களை, என் கண் முன்னே நுணுக்கமாக
காட்டியவள்
நித்யா கதாபாத்திரம்.
நித்யாவிற்கு, விகடனால் கொடுக்கப்பட்ட இந்த விருது, எனக்கே கொடுக்கப்பட்டது போல் இருக்கிறது.